விடிந்தகரை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விளக்கு பூஜை
20-01-2023, வெள்ளிக்கிழமை இரவு விடிந்தகரை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்
விளக்கு பூஜை வெகு நேர்த்தியாக நடைபெற்றது. 21 மகளிர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக
திரு.பிள்ளையார் நயினார்(கலைநன்மணி,எள்ளுவிளை) திரு.சர்மா (சமூகதொண்டர்,நாகர்கோவில்)
திரு.நாகர் (மூவேந்தர் நகர், நாகர்கோவில்)திரு.எம்.எஸ்.மணி(நாகர்கோவில் ஹிந்து வித்யாலயா
பள்ளி ஒருங்கிணைப்பாளர் )திரு.மாதவன்(வில்லுக்குறி) திரு .இராமசுவாமி (கன்னியாகுமரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.விளக்கு
பூஜைக்குப்பின் திரு.பிள்ளையார் நயினார் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
அதன்பின்
குலுக்கல் முறையில் தேர்வு செய்து திருமதி. பத்மா என்ற சகோதரிக்கு வழக்கம்போல் அன்பர்கள்
அன்பளிப்பாக வழங்கிய பித்தளை குத்து விளக்கு, தட்டு,பத்தி ஸ்டான்ட்,சூடம் தட்டு, பஞ்சபாத்திரம்
போன்ற பொருட்கள் திரு.பிள்ளையார் நயினார் அவர்களின் திருக்கரங்களால் பலத்த கரவொலிக்கிடையில்
வழங்கப்பட்டது.
கோவில் சார்பில் திரு.நயினார்
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.பின்னர் மங்கள ஆரத்திக்குப்பின்
விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவெய்தியது .அனைவருக்கும் இனிப்பு பிரசாரம்
வழங்கப்பட்டது. திரு . நாகர் அவர்கள் பேசும்போது இனி அடுத்து தான் இங்கு வரும் போது விநாயகர்அகவல்
சொல்பவருக்கு தன் சொந்த செலவில் பரிசுகள் வழங்க இருப்பதாக கூறி மக்களை உற்சாகப்படுத்தினார். திரு.சர்மா அவர்கள் தங்கள் குழுவுடன் விடிந்தகரை
வந்து கோவிலில் உழவாரப்பணி செய்ய தயாராக இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார்.
No comments:
Post a Comment